க்வெண்டின் டரண்டினோவும் (இன்றைய)தமிழ் சினிமாவும்
க்வெண்டின் டரண்டினோவுக்கும் தமிழ் சினிமாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும், இவரின் படங்களை போல் தமிழ் சினிமாவில் எந்த படமும் வெளி வந்ததில்லை எனலாம். முதலில் இவரின் படங்களை பற்றி ஒரு அலசல்.
Pulp Fiction (1994)
இந்த படத்தில் மூன்று முக்கிய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மூவரில் யாருக்கும் அவ்வளவு முக்கியத்துவம் இல்லை. கதை மூன்று பாகங்களாக பிரிக்கப்படுகிறது, ஒரு புள்ளியில் மூன்று கதையும் ஒன்றாக சேர்கிறது. படம் ஒரே நேராக செல்லாமல் ‘non linear story’ வகையில் செல்கிறது. படம் முடிந்தவுடன் எது ‘climax’ என்று அறிய உங்களுக்கு குறைந்தது 2-5 நிமிடம் வரை தேவைப்படும். இல்லையெனில் ‘climax’ ஐய அறிய நீங்கள் படத்தை ஒரு முறை fast forward செய்வீர்கள். அப்படியும் உங்களால் கண்டுபிடிக்க முடியாவிட்டால் படம் உங்களுக்கு புரியவில்லை என்று அர்த்தம்.
Reservoir Dogs (1992)
http://www.youtube.com/watch?v=ePqgOzEKG3o
இதே போன்றே இவரின் மற்றபடங்கலான ‘Inglorious bastards, Kill bill, Death proof…..இன்னும் பல’ படங்களிலும் வித்தியாசமான கதைக்களத்தை நீங்கள் காணலாம். இதில் ‘death proof’ மட்டும் சரியாக ஓடவில்லை என்றாலும் இதில் வரும் ‘chasing scene’ உலகத்தரங்களில் ஒன்றாக உள்ளது. Link இதோ,
http://www.youtube.com/watch?v=h0LhNwDcjYQ
இவர் படங்களின் சிறப்பம்சங்கள்.
1. ஹீரோ அல்லது ஹீரோயின் யாராவது ஒருவர் மட்டுமே இருப்பது. (முடிந்த வரையில் அதுவும் தவிர்க்கப்படுகிறது)
2. காதல் காட்சிகள் அறவே இல்லை(pulp fiction ல் மட்டும் ஒரு சில காட்சிகள் உண்டு)
3. கதை ஒரே நேராக இல்லாமல் இருப்பது. குறிப்பாக சண்டைக்காட்சிகள் அதிகம் இல்லாமல் இருப்பது.
4. எதிர்பார்த்திராத climax காட்சிகள்.
5. Low budget படங்கள்.
இவர் படங்களின் கோளாறுகள்.
1. எல்லா படங்களும் வன்முறையை சார்ந்திருப்பது.
இதைபோன்ற படங்களை பார்க்கும்போது தமிழில் ஏன் இதைபோன்ற படங்கள் வருவதில்லை என யோசிக்கத்தோன்றுகிறது.
இதைப்பற்றி என் நண்பனிடம் வாதம் செய்தபோது, தமிழில் இதைபோன்ற படங்களை எடுக்கும் அளவுக்கு இங்கே யாருக்கும் திறமை இல்லை என்றான். இதை நான் மறுக்கிறேன், காரணம்
தமிழ் திரையுலகில் கதையை விட ஹீரோ மற்றும் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. இரண்டு (அ) மூன்று பெரிய நடிகர்கள் சேர்ந்து நடிப்பதில்லை.
Hero introduction - fight followed by opening song, படத்தில் 5 பாடல்கள், 5 சண்டைக்காட்சிகள், 2 டூயட் பாடல்கள்(abroad location) நடுவில் ஒரு குத்துபாட்டு போன்ற பல வரையறுக்கப்படாத விதிமுறைகள் தமிழ் சினிமாவில் உள்ளது. ஹீரோ எப்படி இருந்தாலும் பரவாயில்லை(gud, bad, anti hero). ஹீரோயின் ஒரு நல்ல குடும்பத்தை சேர்ந்தவளாக(அழகாக) இருக்கவேண்டும் என்பது விதி. இதற்கு மாறாக ஒரு சில படங்களே வந்துள்ளது. EX . புதுப்பேட்டை
ஆனால் இதைபோன்ற படங்களிலும் ‘சோனியா அகர்வால்’ போன்ற கேரக்டர்கள் திணிக்கப்படுகிறது. தமிழ் சினிமாவின் இயக்குனர்கள் இந்த விதிமுறைகளை மீறி படம் எடுக்க முன்வருவதில்லை. அப்படியே வந்தாலும் இங்கே இயக்குனர்களின் போக்கிற்கு யாரும் படம் எடுக்க விடுவதில்லை. ஹீரோ மற்றும் தயாரிப்பாளர்களின் முறையீடுகள் அதிகமாக உள்ளது. அவர்கள் சினிமாவை ஒரு ஊடகமாக பார்க்காமல் வியாபார ரீதியாகவே பார்க்கிறார்கள். அப்படியே இருந்தாலும் இயக்குனர்கள் தங்களை நிரூபிக்க ஒன்று அல்லது இரண்டு கமர்சியல் படங்களை இயக்கவேண்டியுள்ளது. அதற்கு சில எடுத்துக்காட்டுகள் இதோ,
உண்மையில் ‘இதயக்கோவில்' ன் கதையும் கிளைமாக்ஸ் காட்சியும் வேறாக இருந்தது. நான் சினிமாவிற்கு வந்த புதிது என்பதால் தயாரிப்பாளரின் பேச்சை தட்டமுடியாமல் அவரின் கருத்திற்கேற்ப ‘climax’ஐ மாற்றிவைத்தேன் – மணிரத்னம்.
நான் சினிமாவிற்கு வந்ததே ‘பருத்தி வீரன்' படத்தை எடுக்கவேண்டும் என்பதற்காகத்தான். புதிய இடம் என்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஹீரோவும் ஹீரோயினும் பெரிய ஆட்கள் இல்லை போன்ற காரணங்களினால் மௌனம் பேசியதே படத்தை எடுக்க நேரிட்டது – அமீர்.
அடுத்து தமிழ்படங்களின் பாடல்கள் மற்றும் சண்டைக்காட்சிகள்
தற்போது தமிழில் வெளிவரும் படங்கள் அனைத்தும் குறைந்தது 5 பாடல்களை கொண்டுள்ளது. அதில் கண்டிப்பாக ஒரு குத்துப்பாட்டு. உண்மையில் தமிழ் சினிமாவில் பாடல் காட்சிகள் எதற்காக? தேவையான இடங்களில் பாடல்கள் இருக்கலாம். ஆனால் குறைந்தது 5 பாடல்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
பாடல்கள் படத்தின் வேகத்தினை குறைத்துவிடுவது மட்டுமல்லாமல் குத்துப்பாடல்களால் தமிழ்ப்படம் * மதிப்பை இழந்து விடுகிறது. திரு. மணிரத்னம் அவர்கள் இயக்கிய ‘நாயகன்’ படம் உலகின் மிகச்சிறந்த 100 படங்களின் பட்டியலில் 63 வது இடத்தை வகிக்கிறது.
http://www.time.com/time/specials/packages/article/0,28804,1953094_1953146_1953789,00.html
ஆனால் அவர் படத்திலும் மசாலா (நிலா அது வானத்து மேலே, ருக்குமணி ருக்குமணி ......) பாடல்கள் இருப்பது மறுக்கமுடியாத உண்மை.
சமீபகாலத்தில் வெளிவந்த ‘நான் மகான் அல்ல, அலி பாபா’ போன்ற படங்களில் பாடல்கள் குறைக்கபட்டிருப்பது வரவேற்கதக்க விஷயம். பாடல் காட்சிகளால் பலர் பயனடைவார்கள் என்ற ஒரே ஒரு நல்ல விஷயத்தை தவிர தமிழ் படங்களில் வரும் பாடல்களால் எந்த உபயோகமும் இல்லை.
அடுத்து வருவது சண்டைக்காட்சி.
தமிழ் பட ஹீரோ எவ்வளவு உடல் வளம் குறைவாக இருந்தாலும் குறைந்தது 20 வது முதல் 25 ஆட்களை அசால்ட் ஆக அடிக்கிறார். ஒரு சில படங்களில் சண்டைக்காட்சிகள் பாதியாகவும், கதை மீதியாகவும் இருப்பதை கூட நீங்கள் காணலாம். வெகுநேர சண்டைக்காட்சிகள் நம்மில் பலரை கடுப்படையசெய்கின்றன. அந்த வகையில் ‘நான் மகான் அல்ல’ படத்தில் வரும் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியும், ‘ஈசன்’ படத்தில் வரும் சண்டைக்காட்சியும் சற்று வித்தியாசமாகவும், நம்பும்படியாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கடைசியில்
“ஹீரோயின், பாடல்கள் & சண்டைக்காட்சிகள் இல்லாம தமிழ்படம் வந்தா ஒடுமாடா?” என நண்பனிடம் கேட்டதற்கு,
“தியேட்டரை விட்டு வேணும்னா ஓடும்” என்றான்.
இது போன்ற தேவையற்ற விதிமுறைகளை தமிழ் படங்களிலிருந்து நீக்காவிட்டால், தமிழ் சினிமா உலக அளவில் என்ன? தேசிய அளவில் கூட பேசப்படாது என்பது என் கருத்து/ஆதங்கம்.
வாழ்க தமிழ்! வளர்க தமிழ் சினிமா!.
க்வெண்டின் டரண்டினோவுக்கும் தமிழ் சினிமாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும், இவரின் படங்களை போல் தமிழ் சினிமாவில் எந்த படமும் வெளி வந்ததில்லை எனலாம். முதலில் இவரின் படங்களை பற்றி ஒரு அலசல்.
Pulp Fiction (1994)
இந்த படத்தில் மூன்று முக்கிய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மூவரில் யாருக்கும் அவ்வளவு முக்கியத்துவம் இல்லை. கதை மூன்று பாகங்களாக பிரிக்கப்படுகிறது, ஒரு புள்ளியில் மூன்று கதையும் ஒன்றாக சேர்கிறது. படம் ஒரே நேராக செல்லாமல் ‘non linear story’ வகையில் செல்கிறது. படம் முடிந்தவுடன் எது ‘climax’ என்று அறிய உங்களுக்கு குறைந்தது 2-5 நிமிடம் வரை தேவைப்படும். இல்லையெனில் ‘climax’ ஐய அறிய நீங்கள் படத்தை ஒரு முறை fast forward செய்வீர்கள். அப்படியும் உங்களால் கண்டுபிடிக்க முடியாவிட்டால் படம் உங்களுக்கு புரியவில்லை என்று அர்த்தம்.
Reservoir Dogs (1992)
இந்த படத்தை பார்த்தபோது, தமிழ் சினிமாவில் இப்படியொரு படம் எடுக்கமாட்டார்களா என ஏங்கினேன். இந்த படத்தில் நடித்திருப்பவர்களில் ஒரு பெண் கூட இல்லை. இந்த படத்தில் மொத்தம் 8 நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இந்த 8 பேரும் அவர்கள் கொள்ளையடிக்கப்போவதை பற்றி plan செய்கிறார்கள். அவர்கள் கொள்ளைடிக்கப்போனபோது என்ன நடந்தது என்பதுதான் மீதிக்கதை. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அவர்கள் கொள்ளையடிக்கபோகும் காட்சி திரையில் காட்டப்படுவதில்லை. இந்த 8 நாய்களில் ஒரு நாய் போலீஸ் நாய் என்பது ‘climax’ இல் தெரியவருகிறது. இந்த படத்தின் ‘climax’ காட்சி போல் இதுவரை எந்தப்படத்திலும் வந்ததில்லை எனலாம். நீங்கள் ‘climax’ ஐ பார்க்க வேண்டும் என்று விரும்பினால் கிழ்க்கண்ட link ல் காணலாம். http://www.youtube.com/watch?v=ePqgOzEKG3o
இதே போன்றே இவரின் மற்றபடங்கலான ‘Inglorious bastards, Kill bill, Death proof…..இன்னும் பல’ படங்களிலும் வித்தியாசமான கதைக்களத்தை நீங்கள் காணலாம். இதில் ‘death proof’ மட்டும் சரியாக ஓடவில்லை என்றாலும் இதில் வரும் ‘chasing scene’ உலகத்தரங்களில் ஒன்றாக உள்ளது. Link இதோ,
http://www.youtube.com/watch?v=h0LhNwDcjYQ
இவர் படங்களின் சிறப்பம்சங்கள்.
1. ஹீரோ அல்லது ஹீரோயின் யாராவது ஒருவர் மட்டுமே இருப்பது. (முடிந்த வரையில் அதுவும் தவிர்க்கப்படுகிறது)
2. காதல் காட்சிகள் அறவே இல்லை(pulp fiction ல் மட்டும் ஒரு சில காட்சிகள் உண்டு)
3. கதை ஒரே நேராக இல்லாமல் இருப்பது. குறிப்பாக சண்டைக்காட்சிகள் அதிகம் இல்லாமல் இருப்பது.
4. எதிர்பார்த்திராத climax காட்சிகள்.
5. Low budget படங்கள்.
இவர் படங்களின் கோளாறுகள்.
1. எல்லா படங்களும் வன்முறையை சார்ந்திருப்பது.
இதைபோன்ற படங்களை பார்க்கும்போது தமிழில் ஏன் இதைபோன்ற படங்கள் வருவதில்லை என யோசிக்கத்தோன்றுகிறது.
இதைப்பற்றி என் நண்பனிடம் வாதம் செய்தபோது, தமிழில் இதைபோன்ற படங்களை எடுக்கும் அளவுக்கு இங்கே யாருக்கும் திறமை இல்லை என்றான். இதை நான் மறுக்கிறேன், காரணம்
தமிழ் திரையுலகில் கதையை விட ஹீரோ மற்றும் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. இரண்டு (அ) மூன்று பெரிய நடிகர்கள் சேர்ந்து நடிப்பதில்லை.
Hero introduction - fight followed by opening song, படத்தில் 5 பாடல்கள், 5 சண்டைக்காட்சிகள், 2 டூயட் பாடல்கள்(abroad location) நடுவில் ஒரு குத்துபாட்டு போன்ற பல வரையறுக்கப்படாத விதிமுறைகள் தமிழ் சினிமாவில் உள்ளது. ஹீரோ எப்படி இருந்தாலும் பரவாயில்லை(gud, bad, anti hero). ஹீரோயின் ஒரு நல்ல குடும்பத்தை சேர்ந்தவளாக(அழகாக) இருக்கவேண்டும் என்பது விதி. இதற்கு மாறாக ஒரு சில படங்களே வந்துள்ளது. EX . புதுப்பேட்டை
ஆனால் இதைபோன்ற படங்களிலும் ‘சோனியா அகர்வால்’ போன்ற கேரக்டர்கள் திணிக்கப்படுகிறது. தமிழ் சினிமாவின் இயக்குனர்கள் இந்த விதிமுறைகளை மீறி படம் எடுக்க முன்வருவதில்லை. அப்படியே வந்தாலும் இங்கே இயக்குனர்களின் போக்கிற்கு யாரும் படம் எடுக்க விடுவதில்லை. ஹீரோ மற்றும் தயாரிப்பாளர்களின் முறையீடுகள் அதிகமாக உள்ளது. அவர்கள் சினிமாவை ஒரு ஊடகமாக பார்க்காமல் வியாபார ரீதியாகவே பார்க்கிறார்கள். அப்படியே இருந்தாலும் இயக்குனர்கள் தங்களை நிரூபிக்க ஒன்று அல்லது இரண்டு கமர்சியல் படங்களை இயக்கவேண்டியுள்ளது. அதற்கு சில எடுத்துக்காட்டுகள் இதோ,
உண்மையில் ‘இதயக்கோவில்' ன் கதையும் கிளைமாக்ஸ் காட்சியும் வேறாக இருந்தது. நான் சினிமாவிற்கு வந்த புதிது என்பதால் தயாரிப்பாளரின் பேச்சை தட்டமுடியாமல் அவரின் கருத்திற்கேற்ப ‘climax’ஐ மாற்றிவைத்தேன் – மணிரத்னம்.
நான் சினிமாவிற்கு வந்ததே ‘பருத்தி வீரன்' படத்தை எடுக்கவேண்டும் என்பதற்காகத்தான். புதிய இடம் என்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஹீரோவும் ஹீரோயினும் பெரிய ஆட்கள் இல்லை போன்ற காரணங்களினால் மௌனம் பேசியதே படத்தை எடுக்க நேரிட்டது – அமீர்.
அடுத்து தமிழ்படங்களின் பாடல்கள் மற்றும் சண்டைக்காட்சிகள்
தற்போது தமிழில் வெளிவரும் படங்கள் அனைத்தும் குறைந்தது 5 பாடல்களை கொண்டுள்ளது. அதில் கண்டிப்பாக ஒரு குத்துப்பாட்டு. உண்மையில் தமிழ் சினிமாவில் பாடல் காட்சிகள் எதற்காக? தேவையான இடங்களில் பாடல்கள் இருக்கலாம். ஆனால் குறைந்தது 5 பாடல்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
பாடல்கள் படத்தின் வேகத்தினை குறைத்துவிடுவது மட்டுமல்லாமல் குத்துப்பாடல்களால் தமிழ்ப்படம் * மதிப்பை இழந்து விடுகிறது. திரு. மணிரத்னம் அவர்கள் இயக்கிய ‘நாயகன்’ படம் உலகின் மிகச்சிறந்த 100 படங்களின் பட்டியலில் 63 வது இடத்தை வகிக்கிறது.
http://www.time.com/time/specials/packages/article/0,28804,1953094_1953146_1953789,00.html
ஆனால் அவர் படத்திலும் மசாலா (நிலா அது வானத்து மேலே, ருக்குமணி ருக்குமணி ......) பாடல்கள் இருப்பது மறுக்கமுடியாத உண்மை.
சமீபகாலத்தில் வெளிவந்த ‘நான் மகான் அல்ல, அலி பாபா’ போன்ற படங்களில் பாடல்கள் குறைக்கபட்டிருப்பது வரவேற்கதக்க விஷயம். பாடல் காட்சிகளால் பலர் பயனடைவார்கள் என்ற ஒரே ஒரு நல்ல விஷயத்தை தவிர தமிழ் படங்களில் வரும் பாடல்களால் எந்த உபயோகமும் இல்லை.
அடுத்து வருவது சண்டைக்காட்சி.
தமிழ் பட ஹீரோ எவ்வளவு உடல் வளம் குறைவாக இருந்தாலும் குறைந்தது 20 வது முதல் 25 ஆட்களை அசால்ட் ஆக அடிக்கிறார். ஒரு சில படங்களில் சண்டைக்காட்சிகள் பாதியாகவும், கதை மீதியாகவும் இருப்பதை கூட நீங்கள் காணலாம். வெகுநேர சண்டைக்காட்சிகள் நம்மில் பலரை கடுப்படையசெய்கின்றன. அந்த வகையில் ‘நான் மகான் அல்ல’ படத்தில் வரும் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியும், ‘ஈசன்’ படத்தில் வரும் சண்டைக்காட்சியும் சற்று வித்தியாசமாகவும், நம்பும்படியாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கடைசியில்
“ஹீரோயின், பாடல்கள் & சண்டைக்காட்சிகள் இல்லாம தமிழ்படம் வந்தா ஒடுமாடா?” என நண்பனிடம் கேட்டதற்கு,
“தியேட்டரை விட்டு வேணும்னா ஓடும்” என்றான்.
இது போன்ற தேவையற்ற விதிமுறைகளை தமிழ் படங்களிலிருந்து நீக்காவிட்டால், தமிழ் சினிமா உலக அளவில் என்ன? தேசிய அளவில் கூட பேசப்படாது என்பது என் கருத்து/ஆதங்கம்.
வாழ்க தமிழ்! வளர்க தமிழ் சினிமா!.
No comments:
Post a Comment