Thursday, April 14, 2011

முதல் முத்தம்

“என்னடா ஆச்சு? ஏன் கை கால் எல்லாம்  அடி பட்டிருக்கு?” நான்
“எங்க கிளாஸ் அனிதா இல்ல!. அவளுக்கு நேத்து ஒரே ஒரு முத்தம்தான்டா குடுத்தேன். அவ நேரா எங்க அப்பாகிட்ட சொல்லிட்டா. அதான்! எங்க அப்பா என்ன அடி பின்னிட்டாரு!”
“அனிதா!!!!!  இருடி உன்ன வச்சிக்கிறேன்!” ராமு.
எங்கள் ஊரிலேயே ராமுதான் எனக்கு தெரிந்த ஒரே ப்ளே பாய். அவன் படிப்பது மெட்ரிகுலேஷன் பள்ளியாதலால் ஆண்களும் பெண்களும் ஒரே வகுப்பில் உண்டு. நானும் முத்துவும் படிப்பது அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. நாங்கள்  மூவரும் 9 ம் வகுப்பின் தேர்வை முடித்துவிட்டு ரிசல்ட்க்காக காத்துக்கொண்டிருந்தோம்.  எங்கள் மூவரில் அவனுக்கு மட்டும் ஒரு தனி மரியாதை உண்டு.  அதற்கு காரணம் அவன் இதுவரை 19 பெண்களுக்கு முத்தம் கொடுத்துவிட்டானாம்.

“சரிடா! பாக்கலாம்! எதிர்வீட்டு ஸ்டெல்லா இல்ல. அவளுக்கு நாளைக்கு பர்த்டேவாம். நான் போய்ட்டு அவளுக்கும் ஒரு முத்தம் குடுத்துட்டு வரேன்” சொல்லிவிட்டு  சந்தோசமாய் பறந்தான்.

அவன் சென்றதும் முத்து உடைந்துவிட்டான்.

“ச்சே! நம்ம செட்லயே ராமுதான்டா என்ஜாய் பண்றான். எங்கப்பாவும் உங்கப்பாவும் வேஸ்ட்டா…நம்மளயும் அந்த மாதிரி ஸ்கூல்ல சேர்த்திருந்தா எவ்ளோ ஜாலியா இருக்கலாம்”
“ஆமாடா! 15 வயசாச்சி! இன்னும் ஒரு பொண்ணுக்கு கூட முத்தம் குடுக்கல!" நான் 
எங்கள் இருவருக்கும் தேர்வு முடிவைவிட இதுதான் பெரிய கவலையாக இருந்தது.

“பாபு! இந்த லீவ் முடியறதுக்குள்ள நம்ம ரெண்டு பேரும் யாராவது ஒரு பொண்ணுக்காவது முத்தம் குடுக்கறோம். அடி வாங்குறதபத்தி அப்புறம் யோசிக்கலாம். என்ன?”
“சரிடா! நான் ரெடி!” 

அவனிடம் சரி என்று சொல்லிவிட்டாலும் எனக்கு அது ரொம்ப கஷ்டமான வேலையாக இருந்தது.
“It’s a very difficult task you know!”
நான் குழப்பத்தோடு வீட்டுக்குள் நுழைய

“இதப்பாருங்க! ரெண்டு மாசம் லீவ். இந்த அராத்த வச்சி சமாளிக்க என்னால முடியாது. பேசாம பாபுவ எங்க அம்மா வீட்டுக்கு அனுப்பிடுங்க!” என் அம்மா
“அது ஏனோ தெரியவில்லை! பள்ளி விடுமுறை நாட்களில் மட்டும் குழந்தைகள் பெற்றோர்களுக்கு எதிரிகளாகவே தெரிகிறார்கள்.

மறுநாள் பல அறிவுரைகளுக்குப்பின் தனியாக சிதம்பரத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு அனுப்பப்பட்டேன். இரண்டு மாதங்களுக்கு முன்தான் என் சித்திக்கு திருமணமானது. என் சித்தியும் பாட்டி வீட்டில்தான் இருந்தாள்.

“இந்தா 300 ரூபா..பாத்து செலவு பண்ணு. சரியா?..சிதம்பரத்துக்கு போனதும் ஒரு போன் பண்ணி சொல்லிடு. என்னடா முழிக்கிற? சரியா?” அப்பா.

ச்சே! இந்த ஊரிலாவது பக்கத்து வீட்ல செல்வி இருக்கா. நான் சிதம்பரத்துல போய் என்ன செய்ய?

“வாடா பாபு! எப்ப வந்தா! வீட்ல எல்லாரும் சௌக்கியமா?” இந்த ஒரே கேள்வியை  எல்லாரும் மாற்றி மாற்றி கேட்டுக்கொண்டிருந்தார்கள்.  எனக்கு உறவுமுறைகள் பற்றி தெரியாததால் என் சித்தி அருகிலிருந்து உதவி செய்தாள். ஆனால் ஒரே ஒரு பெண் மட்டும் தயங்கி தயங்கி வெளியே நின்றுகொண்டிருந்தாள்.

“என்னடி முழிக்கிற! யாருன்னு தெரிலையா? உன் மாமா! பேரு பாபு!” என் சித்தி

அவள் என் சித்தப்பாவின் தங்கை மகள் என்றும், பெயர் பானு என்றும், 7 ம் வகுப்பு தேர்வு எழுதியிருப்பதாகவும் என் சித்தி கூறினாள்

அடுத்த இரண்டு நாட்கள் நான் தனியாக சுற்றிக்கொண்டிருந்தேன். பின் பானு சிறிது சிறிதாக என்னிடம் பழக ஆரம்பித்தாள். நான் அவளுக்கு  ஊர் முழுவதும் சுற்றிக்காட்டினேன். அந்த இரண்டு வாரத்தில் அவளின் அழகும் கொஞ்சம் கூடியிருந்தது.  நான் முடிவு செய்துவிட்டேன். நான் முத்தம்  கொடுக்க தகுதியானவள் இவள் மட்டும்தான். ஆனால் எப்படி கொடுப்பது? இதைப்பற்றி ராமுவிடம் வேறு கேட்காமல் வந்துவிட்டேன்.

அடுத்தநாள் முதல் அவள் தனியாக இருக்கும் சந்தர்பத்திற்காக காத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அதிக நேரம் காக்கவில்லை. அன்று அவள் தனியாக இருந்தாள். வீட்டில் எல்லோரும் கோவிலுக்கு சென்றுவிட்டிருந்தார்கள்.

“என்ன அப்டி பாக்குற!”
“ஒண்ணும் இல்ல! கொஞ்சம் கிட்டவாயேன்!”
“வந்துட்டேன். சொல்லு?”
“கண்ணமூடு!”
“சரி மூடிட்டேன்! சீக்கிரம் சொல்லு!”

அந்த நிமிஷம் ஒருவித பயமும், பரவசமும் என்னை சூழுந்துகொண்டது. நான் என் உதடுகளை ஈரப்படுத்திகொண்டேன். நான் அவள் முகத்தருகே சென்றபோது………….

“தம்பிரீ! நல்லா இருக்கீங்களா? ஊர்லேர்ந்து எப்ப வந்தீங்க? நீங்க வந்திருக்கறதா சொன்னாங்க. அதான் பாத்துட்டு போலாம்னு வந்தேன்!” ஒரு கிழவன் உள்ளே நுழைந்தான். பானு வெளியே ஓடிவிட்டாள். அடுத்த அரைமணி நேரம் அவர் பேசியது எதுவும் என் காதுகளில் விழவில்லை.  என் மனம் பானுவையே நினைத்துகொண்டிருந்தது.

“ச்சே! நல்ல நேரத்துல வந்து காரியத்த கெடுத்துட்டான்.…பாவி!.... என் எண்ணத்தில் அணுகுண்டு வைத்து தகர்த்த அந்த கிழவனை………….……..என்ன செய்ய முடியும்……………………..ஒன்றும் செய்ய முடியாது.

அடுத்த ஒரு வாரம் பானுவை தனியாக சந்திக்க முடியவில்லை.
டுத்த நாள் காலை
“பாபு! உங்க ஊர்ல திருவிழாவாம். அம்மா உன்ன நாளைக்கே ஊருக்கு வர சொன்னாங்க” சித்தி.

என் நேரம் வெகு விரைவாக முடிந்துவிட்டதை நினைத்து மிகவும் வருத்தமாக இருந்தது.  பரவால்ல….………………
முத்தம் குடுக்க ஒரு நொடி போதும். இன்று எப்படியாவது அவளுக்கு முத்தம் கொடுத்துவிட வேண்டும்.  நான் அவளை தேடியபோது வீட்டின் பின்புறம் உள்ள தென்னந்தோப்பில் அமர்ந்திருந்தாள். இரண்டாவது முயற்சியாதலால் சற்று தைரியம் அதிகமாகவே இருந்தது. நான் அவளருகே சென்று.................
ப்ப்ப்சச்!
“Wow! Mission Accomplished!”
“மாமீமீமீமீமீ!!!!!!!!!!!!!!!!!!!!!”

அவள் ‘ஒ’ வென கதற ஆரம்பித்தாள். நான் அவள் வாயை பொத்தி....
“ஏன்டி அழுவுற! அழுகாத! இப்ப நான் என்ன பண்ணிட்டேன்னு இப்படி அழற?”
“ஹ்ம்ம்ம்..நீ ஏன் எனக்கு முத்தம் குடுத்த. முத்தம் குடுத்தா கொழந்த பொறக்கும்னு உனக்கு தெரியாதா?....................”
“அய்யயோ! இது எங்க அப்பாக்கு தெரிஞ்சா என்ன கொன்னுடுவாங்க…ஹீன்ன்ன்னக்க்….” அவள் அழுதுகொண்டே ஏதேதோ உளறினாள்.

“அதெல்லாம் ஒண்ணும் ஆகாதுடி…நீ யார் கிட்டயும் சொல்லாத…ப்ளீஸ்” அவளை தேற்றி அனுப்புவதற்குள் ஒரு வழியாகிவிட்டது. ஆனால், அவள் சென்றதும் பயம் என்னை தொற்றிக்கொண்டது.

“ஒருவேளை உண்மையாவே கொழந்த பொறந்துருமா? நான் சரியா கூட முத்தம் குடுக்கலையே!…..
அப்டி ஒருவேள பொறந்துட்டா............
“என் வயித்துல வளர்ற கொழந்தைக்கு……………” பல தமிழ்படங்களின் வசனங்கள் மனதிற்குள் எதிரொலித்தது. 

நான் தமிழ்ப்பட முதலிரவுக்காட்சிகளை நினைவு கூர்ந்தேன்.
கதாநாயகன்  கதாநாயகிக்கு முத்தம் கொடுக்கிறான்……………... விளக்கு அணைக்கப்படுகிறது…… பத்து மாதம் கழித்து………………க்வா…..க்வா!!!!!

“ஐயோ! அப்போ படத்துல வந்தா மாதிரி கொழந்த பொறந்துருமா! நான் அங்கேயே அழ ஆரம்பித்தேன்
“ச்சே! என் சந்தேகத்தை தீர்த்துவைக்க, ராமு வேற பக்கத்துல இல்ல! இப்ப நான் என்ன பண்றது?”.

அன்றிரவு முழுதும் நான் தூங்கவில்லை. தமிழ்ப்பட வசனமும், பானுவின் பிம்பமும்  மாறி மாறி என் நினைவில் வந்துபோனது.

மறுநாள் காலை, நான் ஊருக்கு திரும்ப ஆயத்தமானேன்.
“சித்தி! நான் ஒன்னு கேட்டா  சொல்லுவியா?”
“சொல்லுடா! என்ன வேணும்?”
“இல்ல!……….. கொழந்த எப்டி பொறக்குதுன்னு கொஞ்சம் சொல்றியா?”

“ஊருக்கு போறப்ப திட்டகூடாதுன்னு பாக்கறேன். முளைச்சி மூணு இல விடல. அதுக்குள்ள பேச்சப்பாரு! வாய மூடிட்டு ஊருக்கு போ. இல்ல, உங்கப்பாகிட்ட சொல்லிடுவேன்!”

நான் பெரியவர்களிடத்தில் எதைக்கேட்டாலும் இதையே சொல்கிறார்கள். அந்த மூணு இல எதுப்பா?

நான், ராமு மற்றும் முத்து

“ஏன்டா பேயறஞ்ச மாதிரி இருக்கே?” ராமு. நான் நடந்ததை கூறினேன்.
ராமு சிரிக்க ஆரம்பித்தான்.

“முத்தம் குடுத்தா எங்கயாவது கொழந்த பொறக்குமா?” இதைப்பற்றி சரியாக தெரியாவிட்டாலும், முத்துவும் சேர்ந்து சிரித்துகொண்டிருந்தான்.

“அப்புறம் எப்டிடா பொறக்கும்?”
“பொண்ணு வயசுக்கு வந்தாதான் கொழந்த பொறக்கும்” ராமு.
“அப்டின்னா?” எனக்கு பதிலளிக்காமல் இருவரும் சிரித்தனர்.
“பானு வயசுக்கு வந்துட்டாளா?”
It’s a hypothetical question.
“அம்மா! பானு வயசுக்கு வந்துட்டாளா?”
“அத ஏன்டா இப்ப கேக்குற?”
“சும்மாதான்”
“தெரிஞ்சு என்ன பண்ணபோற? போ!போய் படிக்கிற வேலையப்பாரு”…….

அதன்பிறகு பானுவிடமிருந்தோ, சித்தியிடமிருந்தோ எந்த தகவலும் வரவில்லை. நாங்கள் மூவரும் பிரிந்து அவரவர் பாதையில் பயணித்தோம். நான் கல்லூரி சென்றதும் எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைத்தது.

சில நாட்களுக்கு முன்,
ஸ்டெல்லா ராமுவுடன் சேர்ந்து ஊரைவிட்டு ஓடிவிட்டதாகவும், முத்து அனிதாவை முறைப்படி திருமணம் செய்து கொண்டதாகவும் அம்மா கூறினாள்.
எனக்கு சிறு வயதில் நடந்ததை நினைத்து சிரிப்பாக இருந்தாலும்...........

“*த்தா! 27 வயசாச்சி…..இன்னும் ஒரு பிகர கூட மடக்க முடியல!”

1 comment:

Powered by Blogger.

Followers

About Me